மரம்

பெங்களூரு: இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிவரை இந்தியாவின் பெங்களூரு நகரில் கனமழையாலும் பெருங்காற்றாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலம், மெக்அலிஸ்டர் சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த மாது ஒருவர், கனமழையின்போது வேரோடு சாயவிருந்த மரத்தைத் தவிர்க்க உடனடியாக பிரேக் போட்டார்.
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமையன்று (மே 7) பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து பரபரப்பான சாலையின் குறுக்கே விழுந்ததில் குறைந்தது ஒருவர் மாண்டுபோனார்.
செஸ்ட்னட் அவென்யூவில் பெரிய மரம் ஒன்று விழுந்து காரை நசுக்கியது.
அஸ்ஸாம்: இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக வன கண்காணிப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வனப் பரப்பு குறித்த தகவல்களை ‘அனைத்துலக வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த அறிக்கையில், இந்தியாவில் கடந்த 2002-2023 வரையிலான காலகட்டத்தில் 4.14 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈரக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் இடம்பெயா்வது, இயற்கைச் சீற்றம் உள்ளிட்டவை மர அழிப்புக்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் 2013-2023 வரை 95% வனங்கள் இயற்கைச் சீற்றங்களின் பாதிப்பால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உணவு, வேளாண் நிறுவனம் (எஃப்ஏஓ) வெளியிட்ட தரவுகளில், “கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் ஆண்டுதோறும் 6.68 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் மர அழிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தை பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.